தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை; கமல்ஹாசன்
தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. சார்பில் நடைபெற்ற தோழமை கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதேபோன்று தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், காவிரி நீரை தடுக்காமல் இருக்க எல்லா வழிகளையும் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் ஒரு நாடு, ஒரு நதி என நினைக்க வேண்டும்.
என்னுடைய பயணம் உதவிக்கரம் நீட்டுவதற்கு மட்டுமல்லாமல் ஆய்வுப்பயணமாகவும் இருக்கும். மத்திய குழுவின் கருத்துகள் மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புவோம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், ஒரு லட்சம் வீடுகளை தமிழக அரசு கட்டித்தரும் வரை என்ன செய்வார்கள்? நிவாரண முகாம்களில் தொற்று நோய் ஏற்பட கூடிய நிலை இருப்பதை கண்டோம். கஜா புயல் பாதித்த தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு மீண்டும் செல்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.