கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்

கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 படங்கள் வெளியாகிறது.

Update: 2018-12-05 23:15 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி–2 தயாராகி உள்ளது. இதில் தனுஷ்–சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர். பாலாஜி மோகன் டைரக்டு செய்துள்ளார். காதல், அதிரடி படமாக எடுத்துள்ளனர். 

அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி–ராஷிகன்னா ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் தங்கவேல் டைரக்டு செய்துள்ளார். இது வித்தியாசமான போலீஸ் கதையாக தயாராகி உள்ளது என்றும், முழுமையான அதிரடி படமாக இருக்கும் என்றும் ஜெயம்ரவி கூறினார். 

சீதக்காதியில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வயதான நாடக கலைஞராக வருகிறார். மேலும் சில தோற்றங்களிலும் நடிக்கிறார். அவரது வயதான வேடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல மணிநேரம் இதற்காக மேக்கப் போட்டு நடித்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்துள்ளார். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. 

கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 பெரிய படங்கள் மோதுவதால் தியேட்டர்களை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது.

மேலும் செய்திகள்