பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா காலமானார்.

Update: 2019-02-04 11:08 GMT
சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 89. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த இவர் வயது முதுமை காரணமாக மரணமடைந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 

தற்போது லண்டனில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  நாளை அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நாளை நெல்லூரில் நடைபெற உள்ளதாக எஸ்.பி.பி. குடும்பத்தார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்