ஸ்ரீதேவியின் நினைவு நிகழ்ச்சியில் அஜித், ஷாலினி பங்கேற்பு

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-02-14 09:54 GMT
சென்னை,

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் , அவரது மனைவி  ஷாலினி, ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு  ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்