புதிய படத்தில் சூர்யா, மாதவன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

Update: 2019-03-12 22:00 GMT
மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யாவும், மாதவனும் முதன் முதலாக இணைந்து நடித்து இருந்தனர். இந்த படம் 2004-ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு கமல்ஹாசனும், மாதவனும் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் விஞ்ஞானி நம்பிநாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்டரி’ என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து படத்தை டைரக்டும் செய்கிறார். இந்த படத்தில் சூர்யாவும் நடிக்கிறார். சிறிது நேரம் வருவதுபோல் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் கதைக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் சிம்ரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்