சாந்தனு-ஆனந்தி ஜோடியுடன் `இராவண கோட்டம்'

பூர்வீக பின்னணியில் உருவாகும் படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

Update: 2019-05-09 21:45 GMT
ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாசாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில டைரக்டர்கள் முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது, `மதயானைக் கூட்டம்' புகழ் விக்ரம் சுகுமாரன், `இராவண கோட்டம்' என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.

இதில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். படம் முழுக்க சாந்தனு பாக்யராஜ் வேட்டி-சட்டையில் வருவதால், அவர் கடந்த சில மாதங்களாக வேட்டி-சட்டையிலேயே நடமாடுகிறார். ராமநாத புரத்தின் பேச்சு வழக்கில்தான் உரையாடுகிறார்.

அப்பாவித்தனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஆனந்தி நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கண்ணன் ரவி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்