பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகர்; ரூ.200 அபராதம்

பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-06-24 16:29 GMT
தெலுங்கானாவில் இந்த வருட தொடக்கத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (சி.ஓ.பி.டி.ஏ.), 2003ன் படி தடை விதிக்கப்பட்டது.  இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும்.

தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ராம் பொத்தினேனி.  இவர் ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.  இதற்கான படப்பிடிப்பு வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே நடந்தது.  படப்பிடிப்பின் இடைவெளியில் ராம் புகைப்பிடித்து உள்ளார்.

இதனை அறிந்த போலீசார் பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என கூறி அந்த இடத்திலேயே அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.  இதற்கான ரசீதும் வழங்கினர்.  பின்பு அந்த தொகையை படத்தயாரிப்பு மேலாளர் செலுத்தி விட்டார்.

மேலும் செய்திகள்