“விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி”

விஜய் நடித்த ‘செந்தூர பாண்டி,’ ‘ரசிகன்,’ ‘தேவா’ ஆகிய மூன்று படங்களை தயாரித்தவர், எஸ்.சேவியர் பிரிட்டோ. இவர், விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார்.

Update: 2019-08-30 11:06 GMT
விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-

“நீண்ட காலத்துக்குப்பின், விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில், மகிழ்ச்சி. அவரை வைத்து ஏற்கனவே 3 படங்களை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம் என்பதை அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்., இது, அவர் நடிக்கும் 64-வது படம்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர். அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க முடிவு செய்து இருக்கிறோம். படம், 2020-ல் திரைக்கு வரும். இது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.” 

மேலும் செய்திகள்