3 கதாநாயகிகளுடன் கதாநாயகன்-வில்லனாக ஸ்ரீகாந்த்!

கதாநாயகன் மற்றும் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.

Update: 2019-10-01 12:07 GMT
‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர் வெற்றி படங்களில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர், ஸ்ரீகாந்த். அடுத்து இவர், ‘மிருகா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘மிருகா’ படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி ஸ்ரீகாந்த் கூறுகிறார்:-

“இந்த கதையில், எனக்கு நல்லவன், கெட்டவன் என 2 குணாதிசயங்களை கொண்ட வேடம். என் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம். இதில் என்னை ஒரு புது பரிமாணத்தில் பார்க்கலாம். என் உடல் மொழி, வசனம் பேசும் விதம் என்று அனைத்தும் புதிதாக இருக்கும்.

என்னுடன் ராய் லட்சுமி மற்றும் 2 அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். மூன்று பேருமே சரிசமாக திறன் பட பணியாற்றி வருகிறார்கள். புலி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அது தொடர்பான காட்சிகளை ‘அனிமேஷன்’ செய்து இருக்கிறார்கள்.

கடை-திரைக்கதை-ஒளிப்பதிவு பொறுப்புகளை எம்.,வி.பன்னீர்செல்வம் ஏற்றுள்ளார். பார்த்திபன் டைரக்டு செய்கிறார். பி.வினோத் ஜெயின் தயாரித்து வருகிறார்.”

மேலும் செய்திகள்