ப.சிதம்பரத்தின் உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை - கவிஞர் வைரமுத்து பேட்டி
ப.சிதம்பரத்தின் உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை என்று அவரை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன். அவரும் கண்கலங்கினார். அவரது உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை. ப.சிதம்பரத்தின் உடல்நிலை, தொண்டு கருதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறோம் என்றார்.