நடிகைகளை பாதுகாக்கும் ‘மீ டூ’ -பூஜா ஹெக்டே
தமிழில் ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மீ டூ குறித்து அவர் கூறியதாவது:-
“மீ டூ போராட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போராட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. மீ டூவால் சினிமா துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகைகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. சினிமா துறையில் மீ டூ இயக்கம் அவசியம். பாலியல் தொல்லைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூவில் தைரியமாக பேசுவதை பாராட்டுகிறேன்.
ஹவுஸ்புல்-4 பட வேலைகள் 70 சதவீதம் முடிந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சாஜித்கான் மீது பாலியல் குற்றாச்சாட்டு வந்ததால் அவரை நீக்கி விட்டு வேறு இயக்குனரை வைத்து மீதி படத்தை முடித்தார்கள். இது வரவேற்கத்தக்கது. இயக்குனர் மீது யார் புகார் சொன்னார்களோ அவர்களுக்கு கிடைத்த மரியாதை.
இதற்கு முன்பு ஒரு பெண் பாலியல் புகார் சொன்னால் அவருக்குத்தான் அவமானம் என்ற நிலைமை இருந்தது.
மீ டூ போராட்டம் ஆரம்பித்த பிறகு அதை சொல்பவர்களுக்கு கவுரவம் வந்துள்ளது. தைரியமாக பேசுகிறார்களே? என்று பாராட்டுகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்.”
இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.