நடிகர் பாபி சிம்ஹாவுக்கு ஆண் குழந்தை

தமிழில் இனிது இனிது, பர்மா, மாயா, கிருமி, உறுமீன், பயமா இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரேஷ்மி மேனன்.

Update: 2019-11-13 22:30 GMT
மிழில் இனிது இனிது, பர்மா, மாயா, கிருமி, உறுமீன், பயமா இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரேஷ்மி மேனன். இவருக்கும், பிரபல வில்லன் நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் 2015-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு ரேஷ்மி மேனன் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பாபி சிம்ஹா, பீட்சா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா, மெட்ரோ, சாமி-2, பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். ரேஷ்மி மேனன்-பாபி சிம்ஹா தம்பதிக்கு ஏற்கனவே முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரேஷ்மி மேனன் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர், நடிகைகள் பலர் ரேஷ்மி மேனனுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவிடுகின்றனர்.

மேலும் செய்திகள்