ஏற்கனவே 2 திருமணம் செய்தவருக்கு நான் 3-வது மனைவியானது குற்றமல்ல - நடிகை நேகா பென்ட்ஸ்

தமிழில் மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது ஆகிய படங்களில் நடித்தவர் நேகா பென்ட்ஸ். இந்தியில் பியார் கோய் கொல் நஹின் படம் மூலம் அறிமுகமாகி தேவதாஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Update: 2020-01-13 23:15 GMT
இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நேகா பென்ட்சுக்கும் மும்பை தொழில் அதிபர் ஷருதுல் பயாசுக்கும் திருமணம் நடந்துள்ளது. நேகாவை மணந்துள்ள ஷருதுல் பயாசுக்கு இது 3-வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். அவருக்கு 3-ம் தாரமாக நேகா மனைவியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பலரும் இந்த திருமணத்தை கேலி செய்து கருத்து பதிவிடுகிறார்கள். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. விமர்சித்தவர்களுக்கு பதில் அளித்து நேகா பென்ட்ஸ் கூறியதாவது:-

“இன்றைய சமூகத்தில் ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் சாதாரண விஷயமாகி விட்டது. வாழ்க்கையில் சொந்த முடிவுகளை அவரவர் எடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. உலகில் யாருமே 3-ம் திருமணம் செய்து கொள்ளவில்லையா? நான் மட்டும்தான் 3-வது திருமணம் செய்து கொண்டேனா? பெரிய குற்றம் செய்ததுபோல் என்னை விமர்சிப்பது சரியல்ல.”

இவ்வாறு நேகா பென்ட்ஸ் கூறினார்.

மேலும் செய்திகள்