மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை

மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-25 05:29 GMT
மும்பை,

ராஜஸ்தானின் உதய்பூர் நகரை சேர்ந்தவர் செஜல் சர்மா (வயது 25).  கடந்த 2017ம் ஆண்டு நடிப்பு துறையில் பணிபுரிவதற்காக மும்பைக்கு சென்றுள்ளார்.  சில விளம்பர படங்களில் நடித்துள்ள அவர் அதன்பின் ஸ்டார் பிளஸ் சேனலில் வெளிவரும் 'தில் தோ ஹேப்பி ஹை ஜி' என்ற நிகழ்ச்சியில் முதன்முறையாக நடிக்க தொடங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் சிம்மி கோஸ்லா என்ற பெயரில் நடித்து உள்ளார்.

'ஆசாத் பரிந்தே' என்ற வலைதள தொடரிலும் அவர் நடித்துள்ளார்.  இந்த நிலையில், நேற்றிரவு தனது குடியிருப்பில் வைத்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அவருடன் 2 நண்பர்களும் இருந்துள்ளனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்து சென்ற போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றை பறிமுதல் செய்து உள்ளனர்.  இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தகவல் அவரது பெற்றோருக்கு இன்று காலை தெரிய வந்துள்ளது.  இதன்பின் அவரது உடல் இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்