அரசியலை குறைத்துக்கொண்டு “ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன்”; டி.ராஜேந்தர் சொல்கிறார்

அரசியலை குறைத்துக்கொண்டு “ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன்” என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Update: 2020-10-04 00:10 GMT
தமிழ் பட உலகில், ‘சகலகலா வல்லவர்’ என்று புகழப்படுபவர், டி.ராஜேந்தர். இவருக்கு கடந்த 3-ந் தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளை இவர் கொண்டாடவில்லை. “கொரோனா நோயினால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில், என் பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.

“இனிமேல் நான் அரசியலை குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் தீவிர கவனம் செலுத்தப்போகிறேன்” என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

மேலும் செய்திகள்