வருமானவரி சோதனை டாப்சியை சாடிய கங்கனா ரணாவத்

நடிகை டாப்சி, இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2021-03-08 01:12 GMT
நடிகை டாப்சி, இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். டாப்சியிடம் இருந்து ரூ.5 கோடிக்கு பண ரசீது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த சோதனை நடந்துள்ளதாக விமர்சனங்களும் கிளம்பின இந்த நிலையில் டாப்சி ‘டுவிட்டரில்’ கேலியாக வெளியிட்ட பதிவில், ''3 நாட்கள் 3 விஷயங்களை தேடி சோதனை நடந்துள்ளது. பாரிஸ் நகரில் எனக்கு சொந்தமாக பங்களா இருப்பதாக கருதி அதன் சாவியை தேடினார்கள். நான் ஏற்கனவே வேண்டாம் என்று மறுத்த ரு.5 கோடி ரசீது. அதை எடுத்து ‘பிரேம்’ போட்டு எனக்கு தரப்போகிறார்கள். 2013-ம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனை பற்றிய என் நினைவுகளை தேடினார்கள். நான் மலிவானவள் இல்லை'' என்று குறிப்பிட்டு இருந்தார். டாப்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில், ''நீங்கள் மலிவானவர்தான். நீங்கள் பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் பெண்ணியவாதி. உங்கள் எஜமானர் காஷ்யப் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013-ல் சோதனை நடந்தது. அதிகாரிகள் உங்களிடம் நடந்த சோதனை அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். நீங்கள் குற்றமற்றவராக இருந்தால் சோதனைக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்