நடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

நடிகர் சல்மான்கான் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

Update: 2021-03-24 16:15 GMT
மும்பை,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதையடுத்து, நாடு முழுவதும் அரசியல், திரைப் பிரபலங்கள் என பல்வேரு தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.  

முன்னதாக நேற்று நடிகர் சஞ்செய் தத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சஞ்செய் தத் பகிர்ந்து இருந்தார். 

மேலும் செய்திகள்