ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-05-07 00:54 GMT
தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. என்னை நன்றாக கவனித்துக்கொண்ட குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இன்னும் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் நன்றாக குணமடைந்து வருகிறேன்.

எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாலும், கொரோனாவால் நாடு மோசமான நிலைக்கு செல்வதால் என்ன பதிவிட வேண்டும் என்று தெரியாததாலும் சமூக ஊடங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டேன். என்ன பேசுவது என்று தெரியாத நேரத்தில் நான் மனதில் இருந்து பாடுகிறேன். அது அனைத்தையும் சொல்லிவிடும். இதுவும் கடந்து போகும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தொற்று காலம் முடிந்து மீண்டும் சந்திப்போம்'' என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2-ம் பாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்