கொரோனா பயம் நீங்க காஜல் அகர்வால் யோசனை

காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் அவர் கைவசம் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளன.

Update: 2021-05-14 05:55 GMT
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் அவர் கைவசம் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளன. கொரோனா குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-

''நாட்டில் கொரோனா பயங்கரமாக உள்ளது. அதை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறோம். இனம்புரியாத பயம் எல்லோரிடமும் இருக்கிறது. வீட்டில் இருப்பவர்களும் பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பயத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் கொரோனா பற்றி யோசிக்காமல் பிடித்த ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனாவை மறக்க முடியும். அதன் மீது இருக்கும் பயமும் போகும். கொரோனாவை பற்றியே சிந்தித்து இனிமேல் அவ்வளவுதான். வாழ்க்கை அழிந்த மாதிரிதான் என்று யோசிக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள். நான் இப்போது துணிக்கு எம்பிராய்டரி செய்யும் வேலையை கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இந்த வேலையை செய்கிறேன். அப்போது மனது உற்சாகமாக இருக்கிறது. அதே மாதிரி சமையல், ஓவியம் என்று ஏதாவது பிடித்த வேலையை செய்யுங்கள். இதுவும் ஒரு சிகிச்சை மாதிரிதான். மனதை தைரியமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம்தான் மனிதனுக்கு பாதி பலம்.’'

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்