‘திகில்’ படத்தில் நடித்ததற்காக தமன்னா நடிப்புக்கு விருது கிடைக்குமா?

தமன்னா, தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.

Update: 2021-05-22 19:51 GMT
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான அவர், திரையுலகுக்கு அறிமுகமாகி 16 வருடங்கள் ஆகிவிட்டன. எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். தொடர்ந்து முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இருப்பதுடன், அதே அந்தஸ்துடன் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் பயணித்து வருகிறார். அவர் இதுவரை 50 படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர், ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் தொடரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது, ஒரு திகில் கதை. இதில் தமன்னா கம்ப்யூட்டரை ஹேக் செய்பவராக நடித்துள்ளார்.

கதைப்படி, தனது தந்தைக்கு சொந்தமான ஒரு சொத்தை தமன்னா விற்க முயற்சிக்கிறார். அந்த முயற்சியின்போது ஒரு கொலை விழுகிறது. அந்த கொலைக்கும், தமன்னாவுக்கும் என்ன தொடர்பு? என்பது ‘சஸ்பென்ஸ்.’இதில் தமன்னாவின் நடிப்பு பேசப்படும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் கிடைக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்