நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம்

நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம்.

Update: 2021-06-23 01:16 GMT
பிரபல குணச்சித்திர நடிகர் அமரசிகாமணி. இவர் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அமரசிகாமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அமரசிகாமணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

மரணம் அடைந்த அமரசிகாமணிக்கு ஷியாமளா தேவி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சாமிநாதன் போன்றோரின் நாடக குழுவில் இருந்து அமரசிகாமணி சினிமாவுக்கு வந்தார்.

ரஜினிகாந்தின் சிவாஜி, விஜயகாந்தின் ரமணா மற்றும் சதுரங்கம், எவனோ ஒருவன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல், அகல்யா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


மேலும் செய்திகள்