துபாய்,பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்புடன் இந்தி நடிகர் விக்கி கவுசாலுக்கு இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் விக்கி கவுசால் துபாயில் தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.View this post on InstagramA post shared by Vicky Kaushal (@vickykaushal09)இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைராகி வருகின்றன. இதுகுறித்து ரசிகர்கள் ‘இது அவருடைய கடைசி பேச்சலர் டூர்’ என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர்.இம்மாதம் 9ம் தெதி அவர்களுடைய திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து பொதுவெளியில் வாய் திறக்காமல் இதுவரை ரகசியமாக வைத்துள்ளனர்.ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சொகுசு பங்களாவான சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் அவர்களுடைய திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு, விருந்தினர்கள் தங்குவதற்காக அங்குள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலின் பல்வேறு அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.திருமணத்துக்கு இன்னும் ஒரு வார காலம் கூட இல்லாத நிலையில், மணமகன் தனது நண்பர்களுடன் துபாயில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.
துபாய்,பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்புடன் இந்தி நடிகர் விக்கி கவுசாலுக்கு இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் விக்கி கவுசால் துபாயில் தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.View this post on InstagramA post shared by Vicky Kaushal (@vickykaushal09)இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைராகி வருகின்றன. இதுகுறித்து ரசிகர்கள் ‘இது அவருடைய கடைசி பேச்சலர் டூர்’ என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர்.இம்மாதம் 9ம் தெதி அவர்களுடைய திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து பொதுவெளியில் வாய் திறக்காமல் இதுவரை ரகசியமாக வைத்துள்ளனர்.ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சொகுசு பங்களாவான சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் அவர்களுடைய திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு, விருந்தினர்கள் தங்குவதற்காக அங்குள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலின் பல்வேறு அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.திருமணத்துக்கு இன்னும் ஒரு வார காலம் கூட இல்லாத நிலையில், மணமகன் தனது நண்பர்களுடன் துபாயில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.