என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்..! பிறந்தநாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்
என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:
எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.