எதிரான அலை வீசுகிறது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை- நடிகர் பவன் கல்யாண்
ஆந்திர மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது அதனுடன் கூட்டணி இல்லை என நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கூறினார். #PawanKalyan
விஜயவாடா
நடிகர் பவன் கல்யாண் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. அதனால் அதனுடன் கூட்டணி வைத்து கொள்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆந்திரா மாநில மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற பாரதீய ஜனதா தெலுங்கு தேசம் கட்சி தவறவிட்டன. கடந்த சட்ட சபை தேர்தலில் 70 தொகுதியிலும் பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதியிலும் எனது கட்சி போட்டியிட்டு இருக்கலாம் ஆனால் போட்டியிடாமல் பா.ஜனதா-தெலுங்குதேசம் கூட்டணியை ஆதரித்தேன். ஆனால் அவர்கள் ஆந்திர மக்களை ஏமாற்றிவிட்டனர். சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பா.ஜனதா என்னை தூண்டி விட்டதாக கூறிவருகிறார். எனது பின்னால் மக்கள் தான் இருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும் இல்லை.
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் ரகசியமாக இணைந்து செயல்படுகின்றன. இரு கட்சிகளும் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை சரியாக கையாளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.