சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி கட்டிட தொழிலாளி சாவு

காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55)

Update: 2017-02-06 22:45 GMT

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். பெரியாம்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சின்னசாமி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்