வி.கைகாட்டி,
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில், வி.கைகாட்டி அருகே பனங்கூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, புதிய பயன்தரும் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் தலைமை தாங்கினார். புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் அறக்கட்டளை பொருளாளர் ஜெனதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.