பெரிய கோளப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

செங்கத்தை அடுத்த பெரிய கோளப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

Update: 2017-03-03 21:00 GMT

செங்கம்,

செங்கத்தை அடுத்த பெரிய கோளப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு செங்கம் தாசில்தார் உதயகுமார் தலைமை தாங்கி, 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ரேணு, மண்டல துணை தாசில்தார் மலர்க்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்