ஊர்க்காவல்படை போலீஸ் ஐ.ஜி. தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

ஊர்க்காவல்படை போலீஸ் ஐ.ஜி. தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

Update: 2017-04-01 22:30 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் திருச்சி சரக ஊர்க்காவல்படை வட்டார தளபதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊர்க்காவல்படை போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், உதவி சரக தளபதி பாரி, வட்டார தளபதி சிராஜுதீன் மற்றும் பிற மாவட்ட ஊர்க்காவல்படை வட்டார தளபதிகளும், துணை வட்டார தளபதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஊர்க்காவல்படை வளாகத்தில் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா மரக்கன்று களை நட்டார். 

மேலும் செய்திகள்