வெங்கலம் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வெங்கலம் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-04-02 20:47 GMT
வேப்பந்தட்டை,

வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், குடிநீர் வழங்க கோரியும் பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் அரும்பாவூர்-பெரம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்