விருதுநகர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
விருதுநகர்,
நீதிமன்ற கட்டணங்களை உயர்த்தியதற்கு ஆட்சேபனை தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் நேற்று
கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் 1116 வக்கீல்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து கோர்ட்டுகளிலும் பணி பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கோரிக்கை தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரனிடம் மனுவும் கொடுத்தனர்.