செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் காயம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி பகுதி அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பூவரசன் (வயது 12).

Update: 2017-07-13 00:03 GMT

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி பகுதி அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பூவரசன் (வயது 12). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பூவரசன் வீட்டில் கிடந்த உபயோகமற்ற செல்போன் பேட்டரியை வைத்து அதில் மின்வயர்களை இணைத்து விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவன் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட மின்வயர்களை ‘சுவிட்ச்’ போர்ட்டில் இணைத்தபோது பேட்டரி திடீரென வெடித்துள்ளது. இதில் பூவரசனின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டு மயங்கினான்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்