40 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2017-08-26 22:30 GMT
இலுப்பூர்,

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணியாணைகளை வழங்கினார்.

தொடர்ந்து இலுப்பூர் பேரூராட்சியை சேர்ந்த 36 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன காலணிகள், முகக்கவசம், கையுறை, தொப்பி, சீருடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சந்தோஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)செல்வராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்