மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-10-16 23:20 GMT
வாடிப்பட்டி,

மதுரை ஆனையூர் எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் தினேஷ்(வயது 20). இவருடைய நண்பர் கல்பாலம் முதல்தெருவை சேர்ந்த சந்தோஷ்(20). இவர்கள் 2 பேரும் திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

நேற்று மதுரையில் இருந்து 2 பேரும் திண்டுக்கலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர். சமயநல்லூர் அருகே கட்டபுளி நகரில் நான்கு வழிச்சாலை விலக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்