வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

Update: 2017-10-21 22:30 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் அருகே மாங்காட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் வம்சி (வயது 9), எஸ்.என்.கண்டிகையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வம்சி மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் தங்களது கிராமம் அருகே செல்லும் ஆற்றுப்பகுதியில் மழை வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றனர். வம்சி, தண்ணீரில் இறங்கிய போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு ஆற்றுப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கிக்கொண்டான். இதை பார்த்த மற்ற 2 பேரும் கூச்சலிட்டனர். இதனையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய வம்சியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வம்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்