திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.7¼ லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.7¼ லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து 239 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.7 லட்சத்து 37 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து 239 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.7 லட்சத்து 37 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.