அனைத்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2018-04-20 20:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் துறை வாரியாக நடந்து வரும் பணிகளை விரைவாக முடிக்கவும், புதிய திட்டங்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) முத்து எழில், சுகாதார பணிகள் இணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்