இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சாமல்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-04-20 22:00 GMT
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி கந்தகவுண்டனூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் அம்சவேணி என்ற மகள் உள்ளாள். இந்த நிலையில் முனியம்மாள் அடிக்கடி போனில் பேசி வந்ததாகவும், இதனை அவருடைய மாமியார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முனியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்