ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

லத்தேரி பகுதியில் ஏரி மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-21 21:54 GMT
வேலூர்,

லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று லத்தேரி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனைச் செய்தனர். லாரியில் ஏரி மண் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் மணல் கடத்தி வந்த லத்தேரி கோணக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 31), தொண்டான்துளசி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்