ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு

விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-05-03 23:00 GMT
விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள வீரச்செல்லையாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 62). கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்சவேணியும் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இவர்கள் இருவரும் கடந்த 1-ந் தேதி தேனியில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது பற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்