மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் தொழிலாளி பலி, மனைவி படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2018-05-19 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48), தொழிலாளி. இவர், தனது மனைவி புஷ்பாவுடன் மோட்டார் சைக்கிளில் வேளுகநந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். மருத்துவாம்பாடி கூட்ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த புஷ்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்