கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கையடக்க கணினி கலெக்டர் வழங்கினார்

கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கையடக்க கணினிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

Update: 2018-08-19 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20-வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று(திங்கட்கிழமை) முதல் தொடங்கி 3 மாதங்கள் நடைபெற உள்ளது. அந்த பணியினை கையடக்க கணினி மூலமாக கால்நடை பராமரிப்பு துறையை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பாளர்கள் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள கூடிய அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

இதையொட்டி அவர் கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கும் அலுவலர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார். இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கால்நடைகளை வளர்ப்பவர்கள், விவசாயிகள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கதிரவன் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்