நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Update: 2018-09-22 21:00 GMT

நாங்குநேரி, 

நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இளம்பெண்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. பிரியாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சாவு

இதில் மனமுடைந்த பிரியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்