சூரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

சூரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-21 22:15 GMT
சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஜாகீர் அம்மா பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி இந்திராணி (வயது55). இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் திடீரென இந்திராணி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். பின்னர் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

இதனை சற்றும் எதிர்பாராத இந்திராணி அதிர்ச்சி அடைந்தார். திருடன் திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்