21–ந் தேதி மிலாது நபி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் கதிரவன் தகவல்
மிலாது நபியையொட்டி வருகிற 21–ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என கலெக்டர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
வருகிற 21–ந் தேதி மிலாது நபி ஆகும். இதையொட்டி அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் கிளப்புகள் மூடப்படும். அதனால் அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.