எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது

அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் மரியம் என்பவரது வயலில் உள்ள தைல மரத்தின் மட்டைகளை எந்திரம் மூலம் உறித்து கொண்டிருந்தார். அப்போது வீரமணியின் லுங்கி எந்திரத்தில் மாட்டிக்கொண்டது.

Update: 2019-02-04 22:15 GMT
உடையார்பாளையம்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள வில்வகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வீரமணி(வயது 23). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் மரியம் என்பவரது வயலில் உள்ள தைல மரத்தின் மட்டைகளை எந்திரம் மூலம் உறித்து கொண்டிருந்தார். அப்போது வீரமணியின் லுங்கி எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக வீரமணியின் இடது கால் எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்