சாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

சாராயம் விற்ற பெண் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-15 23:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் ஜெகநாதன் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ரங்கநாயகி (வயது 38). இவர் மீது வளவனூர் பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ரங்கநாயகியை வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து ரங்கநாயகியை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வளவனூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்