மாமல்லபுரத்தில் தீர்த்தவாரி

மாமல்லபுரம் கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

Update: 2019-02-19 20:53 GMT
மாமல்லபுரம்,

108 வைணவதலங்களில் ஒன்று மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில். இந்த கோவிலில் மாசிமகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. நேற்று காலை தலசயன பெருமாள் மற்றும் வராக பெருமாள் உற்சவ மூர்த்திகள் கருட சேவையில் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர். அப்போது கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பிறகு தலசயன பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர்.

விழாவையொட்டி மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசர் தலைமையில் பக்தர்கள் ஆயிரம் பேருக்கு தலசயன பெருமாள் கோவில் முகப்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை தெப்பத்திருவிழா கமிட்டி தலைவர் ஜனார்த்தனம், பொருளாளர் உமாபதி, கோவில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்