பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-18 23:00 GMT
கும்பகோணம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கிலிட வேண்டும். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கோர்ட்டு புறக்கணிப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். 

மேலும் செய்திகள்