படகு கவிழ்ந்து: நடுக்கடலில் தத்தளித்த 6 பேர் உயிருடன் மீட்பு

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

Update: 2019-03-19 00:05 GMT
மும்பை, 

மும்பையில் இருந்து தாராப்பூருக்கு நேற்று காலை 7 பேருடன் ரேவதி என்ற படகு புறப்பட்டு சென்றது. இந்த படகு காலை 11 மணியளவில் ஒர்லி அருகே உள்ள கடல் பகுதியில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் இந்திய கடலோர காவல்படையினர் அமர்தியா மீட்பு கப்பலில் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக மீட்பு கப்பலில் வைத்து அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்தநிலையில் படகில் சென்ற ஒருவர் மாயமாகிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேடுதல் பணியில் 2 கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகள்