தூத்துக்குடி, கோவில்பட்டியில், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-20 23:23 GMT
ஸ்பிக்நகர்,

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவக்குமார், மாநகர செயலாளர் மாரியப்பன், சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மண்டல பொதுச் செயலாளர் நம்பிராஜ், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி உழவார பணிக்குழு தலைவர் விஜயன், வடக்கு மண்டல நிர்வாகி சிபு, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 53-வது வார்டு தலைவர் சுதன் நன்றி கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், ரமேஷ், முனீசுவரன், ஜெகதீஷ் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்